'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் ராம் சரண், நவ்தீப், நாசர், அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிக்க நாயகியாக நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் தயாரிக்கும் இத்திரைப்படம் அக்டோபர் 7ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாகசைதன்யாவின் பிரேமம் தெலுங்கு ரீமேக் திரைப்படம் அக்டோபர் முதல் வாரத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் துருவா படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்திருப்பதாக டோலிவுட்டில் தகவல் பரவியது. ஆனால் அல்லு அரவிந்த் இத்தகவலை மறுத்துள்ளார். துருவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளாதாக வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்தியே எனறும் அறிவித்தபடி அக்டோபர் 7ல் துருவா திரைக்கு வரும் என்றும் அல்லு அரவிந்த் தெளிவுபடுத்தியுள்ளார்.