பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள சினிமாவை பற்றி சாதாரண அளவுக்கு அறிந்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு கூட, அடூர் கோபாலகிருஷ்ணன்' என்கிற பெயர் நிச்சயமாக தெரியாமல் இருக்காது... மலையாள சினிமாவின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படும் அவர் குவித்துள சர்வதேச விருதுகள், தேசிய விருதுகள், கேரள அரசு விருதுகள் ஆகியவற்றை பட்டியலிட்டால் நான்கு ஏ4 பேப்பர்கள் தேவைப்படும்.. அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் திலீப், காவ்யா மாதவனை வைத்து இயக்கிய 'பின்னேயும்' என்கிற படம் கடந்த வாரம் வெளியானது.. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை..
இது ஒருபக்கம் இருக்க, அடிப்படையில் டாக்டராக இருந்தும், சினிமாவின் மீதுள்ள காதலால் படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்றவரான டாக்டர் பைஜூ என்பவர் “இப்படி ஒரு படத்தை அடூர் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. சில அறிவு ஜீவிகள் இந்தப்படம் சூப்பர் என அடூர் கோபால கிருஷ்ணனை புகழ்ந்துகொண்டிருப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இன்றைய சினிமாவுக்கு ஏற்றவாறு அவர் தன்னை அப்டேட் பண்ணிக்கொள்ளவே இல்லை. காலத்திற்கு ஒவ்வாத கதையும் வசனங்களும் காட்சிகளுமாக மலையாள சினிமாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் முயற்சியைத்தான் அவர் செய்துள்ளார்” என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்..
இப்போது இதற்கு அடூர் கோபால கிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.. “டாக்டர் பைஜூவுக்கு என் மேல் பொறாமை.. குடும்ப வாழ்க்கையில் தோற்றுவிட்ட பைஜூவுக்கு என்னை குறைசொல்ல என்ன அருகதை இருக்கிறது.. பைஜூ போன்ற ஒரு சில ஆட்களால் தான் மலையாள சினிமா குட்டிச்சுவராகிக்கொண்டு வருகிறது” என டாக்டர் பைஜூவை விமர்சித்துள்ளார்.