'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் பவன் கல்யாண் ரசிகர், வினோத் குமார் உயிரிழந்த சம்பவம் டோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆகஸ்ட் 24) கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பவன் கல்யாணின் கட்சியான ஜனசேனாவின் தொண்டரும் அவரது தீவிர ரசிகருமான வினோத் குமார்(24) பங்கேற்று பேசியுள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆரை தாக்குவது போல் அமைந்ததாகக் கூறப்படும் வினோத் குமாரின் பேச்சிற்கு, ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர் அக்ஷ்ய் மற்றும் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாக்குவாதம் முற்றி நடந்த கைகலப்பில் அக்ஷ்ய், வினோத்தை கத்தியால் குத்தியுள்ளார். நெஞ்சில் காயம்பட்ட வினோத் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து அக்ஷ்ய் என்பவரை கைது செய்துள்ளனர்.