இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராஜா ரவிவர்மன் போன்று பல பிரபல ஓவியர்களை தந்த பூமி கேரளா. ஆனால் அங்கு பெண் ஓவியர்கள் மிகவும் குறைவு. 1940 முதல் 1969 வரை வாழ்ந்த பெண் ஓவியர் டி.கே.பத்மினி ஆண் ஓவியர்களுக்கே சவாலாக இருந்தார். புகழின் உச்சியில் இருக்கும்போது தனது 29வது வயதில் ஒரு குழந்தையை பிரசவிக்கும்போது இறந்து போனார். பத்து வயதில் ஓவியம் வரைய ஆரம்பித்து 19 ஆண்டுகளில் காலத்தை வென்று நிற்கும் ஒவியங்களை படைத்தார்.
அவரது வாழ்க்கை வரலாறு புத்தகங்களாக வந்துள்ளது. வால்டிஸ்ட் க்ரூ என்பவர் ஆவண படமாக எடுத்துள்ளார். இவற்றை மையமாக வைத்து ஒரு திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. சுமேஷ் சந்திரசூட் என்ற இளைஞர் இயக்குகிறார். இதில் பத்மினியாக அனுமோல் நடிக்கிறார்.
தமிழில் ஒரு நாள் இரவில் படத்தில் விலைமாதுவாக நடித்த அனுமோல் மலையாளத்தில் சிறந்த குணசித்ர நடிகை. அவர் நடித்துள்ள பத்மினி படமும் அங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ரீவித்யா, எழுத்தாளர் கமலா சுரைய்யா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாகி வருவது குறிப்பிடத்தக்கது.