இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிக்க வந்தவர்கள் அனைவரும் நாடகங்களில் இருந்து வந்தவர்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர், நம்பியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலரும் நாடகத்திலிருந்து வந்தார்கள். சிறுவயதிலேயே நாடக கம்பெனியில் சேர்ந்துவிடுவதால் இவர்கள் நிறைய படித்திருக்க மாட்டார்கள் எல்லாமே அனுபவம்தான். நடிப்பார்கள், பாடுவார்கள், கதை, வசனம் எழுதுவார்கள், இயக்குவார்கள்.
ஆனால் இதையெல்லாவற்றையும் தாண்டி சகல திறமைகளோடும் சகலகலா வல்லவனாக சினிமாவுக்கு வந்தவர் ரஞ்சன். 1941ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடித்த அசோக்குமார் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான ரஞ்சன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா படத்தின் மூலம் புகழ்பெற்றார்.
அதன் பிறகு நீலமலைத் திருடன், மங்கம்மா சபதம் படங்களில் நடித்தார். இது தவிர தமிழில் இருந்து இந்திக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவரும் ரஞ்சன் தான். ரஞ்சன் ஒரு விமான பைலட், 7 மொழிகள் பேசக்கூடியவர், ஓவியர், வாள் சண்டை கலைஞர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், குதிரை ரேஸ் வீரர், முறைப்படி நடனம் கற்றவர். இசை அமைப்பாளர், பாடகர் இப்படி பன்முக திறமையோடு சினிமாவுக்கு வந்த முதல் ஹீரோ ரஞ்சன் தான்.