டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் இதுவரை வாழ்த்து சொல்லாத நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கமலுக்கு தனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் இது தொடர்பாக அவர் கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பன்முக திறமையாளரான (சகலகலா வல்லவன்) தங்களுக்கு செவாலியே விருது கிடைத்துள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்திய சினிமாவை உலக அளவில் பேச வைத்த தங்களது முயற்சிக்கு கிடைத்த பலன்தான் இந்த விருது. இந்த விருதை உங்கள் ரசிகர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் சமர்பித்திருப்பது உங்கள் பணிவை காட்டுகிறது. இந்த விருதை பெற்றமைக்காக கேரள மக்களின் சார்பில் உங்களை மனதாரா பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.