இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் மிகத்திறமையான நடிகைகளில் ஸ்வரா பாஸ்கரும் ஒருவர். எப்படிப்பட்ட ரோலிலும் அருமையாக நடிக்கும் ஆற்றல் பெற்றவர். இவர், அடுத்தப்படியாக ஒரு படத்தில் செக்ஸ் தொழிலாளியாக நடிக்க உள்ளார். பிரபல எழுத்தாளரும், உதவி இயக்குநருமான ஆதித்யா கிருபலாணி தான் எழுதிய நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ‛‛திக்லி அண்ட் லக்ஷ்மி பாம்'' என்று பெயர் வைத்திருக்கிறார். இது அந்த நாவலின் பெயர் தான். இந்தப்படத்தில் தான் ஸ்வரா பாஸ்கர், செக்ஸ் தொழிலாளியாக நடிக்கிறார்.
இதுப்பற்றி ஸ்வரா பாஸ்கர் கூறியதாவது... ‛‛ஆதித்யா, இப்படம் பற்றி பேசுவதற்கு முன்னர் தான் எழுதிய புத்தகத்தை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார். நானும் புத்தகத்தை படித்தேன். அவ்வளவு அருமையாக இருந்தது. கதையும் சரி, என்னுடைய ரோலும் சரி இதுவரை நான் நடித்திராத ஒன்று. செக்ஸ் தொழிலாளர்களின் இன்னல்களை பற்றி விரிவாக பேசப்போகும் படமாக இது இருக்கும். இப்படத்தில் நடிக்கவும், பின்னர் அதை திரையில் காணவும் ஆவலாய் இருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது'' என்று கூறினார்.