தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் நடித்தபடியே அவ்வப்போது பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த சமந்தா, அதையடுத்து சில தொண்டு நிறு வனங்களுடன் இணைந்து தான் சம்பாதிப்பதில் ஒரு தொகையை ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். பின்னர் பிரதியுஷா என்ற அமைப்பை தொடங்கி சமீபகாலமாக பெரிய அளவில் சமூகசேவைகளை செய்து வருகிறார் சமந்தா.
இந்த நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த சாந்தினி என்ற 5 வயது பெண்ணுக்கு சாலை விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் சமந்தாவின் பிரதியுஷா தொண்டு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டபோது, அந்த பெண்ணின் அறுவை சிகிச்சைக்கு தேவையான உதவிகளை தான் செய்வதாக முன்வந்துள்ளார் சமந்தா. அதையடுத்து அந்த சிறுமிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து தானும் நேரில் சென்று சிறுமி சாந்தினியை பார்த்து நலம் விசாரித்திருக்கிறார் சமந்தா.