டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரணிதா. அதன்பிறகு கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது அடுத்து தமிழில் முன்னணி நடிகை யாகி விடுவார் என்று கோடம்பாக்கமே எதிர்பார்த்தது. ஆனால் சகுனி தோல்வியடைந்ததால் பின்னர் பிரணிதாவை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் பெருத்த ஏமாற்றத்துடன் மீண்டும் கன்னட சினிமாவுக்கு சென்று நடித்து வந்த அவருக்கு சூர்யாவுடன் நடித்த மாசு என்கிற மாசிலாமணி படமும் கைகொடுக்க வில்லை.
இருப்பினும், தமிழில் ஒரு இடத்தை பிடித்தே தீருவேன் என்று தொடர் முயற்சி காரணமாக தற்போது ஜெய் நடிக்கும் எனக்கு வாய்த்த அடிமைகள், அதர்வா நடிக்கும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜெய் படத்தில் அஞ்சலி முதன்மை நாயகியாக நடிக்க பிரணிதா இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். அதேபோல் அதர்வா நடிக்கும் படத்தில் ரெஜினா, அருந்ததி நாயர் ஆகியோர் முக்கிய ஹீரோயினிகளாக நடிக்க, பிரணிதா சிறிய ரோலில்தான் நடிக்கிறார்.
இருப்பினும் இதுவரை தமிழில் தான் நடித்த படங்கள் வெற்றி பெறாத நிலையில், இந்த படங்களில் ஒன்று வெற்றி பெற்றாலும் தன்மீது விழுந்துள்ள தோல்விப்பட நடிகை என்கிற இமேஜ் மறைந்து வெற்றிப்பட நாயகி இமேஜ் விழுந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் நடித்து வருவதாக சொல்லும் பிரணிதா, தமிழில் எனக்கான இடம் கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று உறுதிபட சொல்கிறார்.