ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தில் இளவரசியாக நடித்தவர் மீனாட்சி தீக்ஷித். அதன்பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களுக்காக முயற்சித்தார். ஆனால் அதற்கான கதவுகள் திறக்கப்படவில்லை. அதனால் சிறிய ஹீரோ படங்களில் நடித்தாவது மார்க்கெட்டில் இருப்போம் என்று டக்கர், பயம் ஒரு பயணம் என்ற இரண்டு படங்களில் நடித்து வந்தார். அதில் பயம் ஒரு பயணம் நாளை திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங் பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். மீனாட்சி தீக்ஷித் நாயகியாக நடித்துள்ளார்.
கதைப்படி, நாயகன் பரத் ரெட்டியை பழிவாங்க வரும் விசாகா பேய், அவர் களது மகளை பழி வாங்கிச்செல்லும். அதோடு படத்தை முடிக்கும்போது அதே விசாகா சிங்கின் பேய் கெட்டப்பில் மீனாட்சி தீக்ஷித்தை காட்டி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் மணிஷர்மா. ஆக, பயம்-2வில் மீனாட்சி தீக்ஷித் பேய் வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.