பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தங்களது விவாகரத்து முடிவுக்கு ஏ.எல்.விஜய் ரொம்பவே டீசன்டான முறையில் காரணம் சொல்லி பிரிந்துவிட்டாலும் கூட, இன்னும் கூட பல திசைகளில் இருந்து பல காரணங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதில் லேட்டஸ்டாக அமலாபாலின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிப்பது அவரது அம்மாதான் என்றும் அவர்தான் பின்னாலிருந்து அமலாபாலை இயக்குகிறார் என்றும், அதுதான் ஏஎல்.விஜய்-அமலாபாலின் திருமண முறிவுக்கு காரணம் என்றும் புதிய தகவல் ஒன்று உலாவருகிறது. ஏ.எல்.விஜய்யிடம் இருந்து அமலாபால் பிரிவதை அவரது குடும்பத்தினரே விரும்பவில்லை என்று சொல்லப்பட்டதில் எந்தவித உண்மையும் இல்லை என்றே சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
அதற்கு முக்கிய காரணம், கேரளாவை சேர்ந்த அமலாபாலை தமிழ்நாட்டுக்கு அழைத்துக்கொண்டு அவரது அம்மா இங்கே வந்ததற்கு காரணமே தனது மகளை முன்னணி நடிகையாக்கி அழகு பார்க்கவேண்டும் என்பதற்காகத்தானம்.. தனது எண்ணப்படி அதை சாதித்தும் விட்டார். ஆனால் பெரும்பாலான நடிகைகளின் அம்மாக்களுக்கே இருக்கும் பணம், புகழ் இரண்டையும் இழக்க விரும்பாமை வியாதி அமலாபாலின் அம்மாவுக்கும் இருக்கிறதாம். அதனால்தான் தனது மகள் பீக்கில் இருக்கும்போதே காதலிப்பதையும் திருமணம் செய்வதையும் அவர் விரும்பவே இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
திருமணம் நடந்தபின் ஒரு நடிகையின் மார்க்கெட் எந்த அளவுக்கு சரிவை சந்திக்கும் என்பதை அவர் அறியாதவர் அல்ல.. அதையும் மீறி அமலாபாலின் பிடிவாதத்தால் திருமணமும் நடைபெற்றது. அதேசமயம் ஏ.எல்.விஜய் வீட்டில் நடிப்பதற்கே தடை போட்டபோது, எங்கே முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என அமலாபாலின் அம்மா திகைத்து போய்விட்டாராம். அவரது மந்திராலோசனையின் பேரில் தான் அமலாபாலின் நடவடிக்கைகள் அவரது கணவருக்கும் கணவரின் குடும்பத்தினருக்கும் எதிராக மாறி, இப்போது விவாகரத்து வரை கொண்டுவந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.