ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
மலையாள நடிகைகளுக்கு அவர்களது படங்கள் மீதும், அவர்களுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் மீதும் உள்ள பாசம் வேறு எந்த மொழி நடிகர்களுக்கும் வராது. நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நடிகைகள் நேரடியாக நடிக்கும் தமிழ், தெலுங்குப் படங்களின் பிரமோஷன்களுக்கு அழைத்தால் கூட வர மாட்டார்கள். அதே போல எந்தப் படத்திற்கு பிரமோஷன் தேவைப்படுகிறதோ அந்தப் படங்களைப் பற்றிக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். பொதுவாக படங்களில் நடிக்கும் நாயகிகள் வந்தால்தான் அந்தப் படங்களைப் பற்றிய கவனம் ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகப் போய்ச் சேரும். ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். படத்தில் நடித்து முடித்து பணத்தை வாங்கி போட்டுக் கொண்டதுடன் தங்களது கடமை முடிந்துவிட்டதென போய்விடுவார்கள்.
ஆனால், நித்யா மேனன் ஒரு டப்பிங் படத்தின் பிரமோஷனுக்கு வந்து மற்ற தயாரிப்பாளர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டிருக்கிறார். மலையாளத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்த '100 டேய்ஸ் ஆப் லவ்' என்ற படம் கடந்த வருடம் வெளியானது. அங்கு மிகப் பெரிய வரவேற்பை அந்தப் படம் பெறவில்லை. அந்தப் படத்தை அதே பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். இந்தப் படத்தின் பிரமோஷனுக்கு தான் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள துல்கர் சல்மானையும் ஹைதராபாத்திற்கு வரவழைத்து தன்னுடைய மலையாளப் பாசத்தைக் காட்டியிருக்கிறார் நித்யா மேனன்.
சேரன் இயக்கத்தில் சர்வானந்த், நித்யா மேனன் நடித்த 'ராஜாதி ராஜா' என்ற நேரடித் தெலுங்குப் படத்தின் பிரமோஷனுக்கு அழைத்தும் வராத நித்யா மேனன் தற்போது மலையாள டப்பிங் படத்தின் பிரமோஷனுக்கு வந்தது எந்த விதத்தில் நியாயம் என்கிறது டோலிவுட் வட்டாரம்.