'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இளம் வயதிலேயே, தமிழ் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என, பல மொழிகளிலும் நடித்தவர்; நளினமான நடன அசைவுகளால் இளம் ரசிகர்களின் மனதுகளை வசியம் செய்பவர்; பில்லா 2, தெனாலி ராமன் படங்களுக்கு பின், பயம் ஒரு பயணம் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தலைகாட்டும் மீனாட்ஷி தீட்ஷித், நமக்கு அளித்த பேட்டி:
பில்லா, தெனாலி ராமன் படங்களுக்கு பின் ஆளையே பார்க்க முடியவில்லையே?
பில்லா என்னை பிரபலபடுத்தியது; தெனாலி ராமனில் என் நடிப்பு பாராட்டப்பட்டது. எப்போதும் எனக்கு ஒரு குறை உண்டு. நான் நடிக்கும் படங்களில், ஒரு சில காட்சிகளிலாவது, எனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என, எதிர்பார்ப்பேன். மற்ற மொழிகளில், எனக்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், தமிழில், எனக்கு திருப்தி அளிக்கும் வகையிலான கேரக்டர்கள் கிடைக்கவில்லை. இப்போது, பயம் ஒரு பயணம் படம் மூலம் நல்ல கேரக்டர் கிடைத்துள்ளது.
இந்த படத்தில், ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறீர்களாமே?
இந்த படத்தில் கதை தான் ஹீரோ. ஒவ்வொரு காட்சியும் குலை நடுங்கும் வகையில் இருக்கும். கல்லுாரிக்கு போகும் பெண், மனைவி, குழந்தைக்கு தாய் என, பல்வேறு வடிவங்களில் நடித்திருக்கிறேன். பொதுவாக, ஹீரோயின்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்காது.
அஜீத்துடன் நடித்த அனுபவம்?
படப்பிடிப்பில், தன்னை பெரிய நடிகராக காட்டிக் கொள்ள மாட்டார். இயல்பாக இருப்பார். சின்ன நடிகராக இருந்தாலும், தட்டிக் கொடுத்து பாராட்டுவார். பில்லாவில் நடிக்கும்போது, அவர், என்னை வாழ்த்தியதை மறக்கவே மாட்டேன்.
தமிழில் யாருடன் நடிக்க ஆசை ?
விஜய் உட்பட, முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடிக்க ஆசை.
எந்த மொழியில் கதை நன்றாக அமைகிறது?
நான் இந்தியில் முதன் முதலில் நடித்த படமே நல்ல கதை தான். அதன்பிறகு படங்கள் படங்கள் கிடைத்தன. இருந்தாலும் நான் எதிர்பார்ப்பது தமிழ் படங்கள் தான்.
உங்கள் பொழுது போக்கு?
நன்றாக சமைப்பேன். ஆனால், சைவம் மட்டும் தான் சமைக்க தெரியும். என் சமையலை, வீட்டில் எல்லோரும் பாராட்டுவர். சென்னை வரும்போதெல்லாம், காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தோசை சாப்பிடுவேன். மும்பை ஓட்டல்களில் இதுபோன்ற ருசி வருவது இல்லை.
உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறீர்களே; எப்படி?
நீச்சல், உடற்பயிற்சி, முறையான சாப்பாடு இதெல்லாம் தான் காரணம். உணவு, நம் உடலில், 70 சதவீதம் என்றால், உடற்பயிற்சி, 30 சதவீதம் அவசியம். சரியான அளவில் சாப்பாடு, நல்ல துாக்கம்; இதை கடைப்பிடித்தாலே, உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
மும்பையில், திருமணம் செய்யாமலேயே, சேர்ந்து வாழும் கலாசாரம் அதிகமாகி விட்டதே?
அதைப்பற்றி எல்லாம் நான் கருத்துச் சொல்ல முடியாது. நானும் மும்பையில் தான் வசிக்கிறேன். கட்டுப்பாடு அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். எங்கள் குடும்பத்தில் இதையெல்லாம் ஆதரிக்க மாட்டார்கள்.
பார்ட்டிக்கு போற பழக்கம் உண்டா?