அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நஸ்ரியா, மீண்டும் நடிக்க வருவதாக கடந்த வருடம் முழுதும் செய்திகள் அடிபட்டன. அவரது கணவர் பஹத் பாசிலும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் அவரோ வந்தபாட்டை காணோம்.. அவர் மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கி கிடந்த அவரது ரசிகர்கள் இப்போதும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. அதற்கு உதாரணமாக பேஸ்புக் பக்கத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை சொல்லலாம்.
நஸ்ரியா பீக்கில் இருந்த காலகட்டத்தில் பேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் அவரை பின் தொடர்ந்தனர்.. ஆனால் இன்று அது படிப்படியாக 75 லட்சத்து 23 ஆயிரமாக குறைந்துவிட்டது. அதேசமயம் நடிகை மியா ஜார்ஜை பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.. நஸ்ரியாவை விட 33 ஆயிரம் பேர் அதிகமாக மியாவை பின் தொடர்கின்றனர். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து மியா பாப்புலராகிவிட்டதால் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. விரைவில் அவர் தெலுங்கிலும் நுழைய இருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு நிறைய இருக்கிறது.