டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரேநாளில் நடக்கும் சம்பவங்கள் என்கிற கான்செப்ட்டை மையமாக கொண்டு வருடத்திற்கு குறைந்தது பத்து படங்களாவது மலையாளத்தில் வெளியாகி விடுகின்றன. அறிமுக இயக்குனர்களும், இரண்டாம் நிலை இயக்குனர்களும் மட்டுமே கவனம் செலுத்திவந்த இந்த கான்செப்ட்டில் முன்னணி நடிகர்கள் அவ்வளவாக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் மம்முட்டியை வைத்து ஜீத்து ஜோசப் இயக்கவுள்ள புதிய படம் கேரள நகரம் ஒன்றில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தானாம்.
இந்தப்படத்தில் மம்முட்டி சராசரி நகரத்து மனிதனாக நடிக்கிறாராம். அப்படி ஒரே நாளில் நிகழும் பிரச்சனைகள் மம்முட்டியை எப்படி திசைமாற்ற முயற்சிக்கின்றன என்பதும் அதிலிருந்து மம்முட்டி எப்படி மீள்கிறார் என்பதும் தான் கதையாம். இந்தப்படத்தின் கதையை கேட்டதுமே ஜீத்துவிடம் உடனே படப்பிடிப்பிற்கு நாள் குறிக்க சொல்லிவிட்டாராம் மம்முட்டி.. ஏற்கனவே 'மெமொரீஸ்' படத்தை பிருத்விராஜுக்கும், 'த்ரிஷ்யம்' படத்தை மோகன்லாலுக்கும் விட்டுக்கொடுத்து இரண்டு ஹிட்டுகளை கைநழுவ விட்ட மம்முட்டி, இந்த முறை சுதாரித்துக்கொண்டார் என்றே சொல்லவேண்டும்.