'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர், மேடை பேச்சாளர் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார் பார்த்திபன். அவர் இயக்கும் படங்கள் வெற்றியோ, தோல்வியோ, ஆனால் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் வித்தியாசமாக இருக்கும்.
இதனிடையே பார்த்திபனின் கலைச் சேவையை பாராட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கி வரும் ரோஸ்டன் அக்ரிட்டேஷன் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு, மாறுபட்ட இயக்குனர் என்ற விருதை வழங்கி உள்ளது. இதனை அந்த அமைப்பின் இயக்குனர் பார்த்திபனிடம் வழங்கினார்.
தங்கமுலாம் பூசப்பட்ட தகட்டில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுக்கான காரணத்தை விளக்கமா எழுதியும் கொடுத்துள்ளனர். கமலஹசானுக்கு செவாலியே விருது கிடைத்தது குறித்து சிலாகித்து பாராட்டிவிட்டு தனக்கு கிடைத்த விருதை "ஏழைக்கு கிடைத்த எள்ளுருண்டை" என்று தனக்கே உரிய பாணியில் வர்ணித்துள்ளார் பார்த்திபன்.