தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிளஸ்-2 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் சுஜாவாருனி. ஆனால் பின்னர் அவர் குத்துப்பாட்டு நடிகையாகி விட்டார். அதோடு கவர்ச்சிகரமான வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது கவர்ச்சியை ஓரங்கட்டி விட்டு கேரக்டர் நடிகையாக வலம்வரத் தொடங்கியிருக்கிறார் சுஜா. அந்த வகையில், சேட்டை படத்திற்கு பிறகு அப்புச்சி கிராமம், பென்சில் ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்தார் சுஜா.
அதைத் தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ், கிடாரி, காதல் தீவு, அமளிதுமளி உள்பட பல படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ள அவர், கிடாரி படத்தில் சிறிய வேடம் என்றாலும் பேசப்படும் வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது சுஜாவா இது என்ற ஆச்சர்யம் ரசிகர்களுக்கு ஏற்படும் என்று கூறும் சுஜா, இனிமேல் தொடர்ந்து சிறிய வேடங்கள் என்றாலும் கதைக்கு சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அதோடு கேரக்டர்களுக்காக என்னை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொண்டு நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிறார் சுஜாவாருனி.