பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்தவர் குத்து ரம்யா. பிரபல கன்னட நடிகையான இவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோடு காங்கிரஸ் கட்சியில் எம்பியாகவும் இருந்தார். அந்த சமயத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சார்க் நாடுகளின் கூட்டம் நடைபெற்றபோது இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட எம்.பிக்களில் குத்து ரம்யாவும் ஒருவர். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், அந்த நாட்டு எம்பிக்கள் என்னுடன் நட்புடன் பழகினர். அதோடு, மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியது போன்று பாகிஸ்தான் நரகம் செல்வதற்கு ஒப்பான நாடு அல்ல. ரொம்ப நல்ல நாடு என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியினர் பெங்களூரில் குத்து ரம்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் இதையடுத்து, பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பாகிஸ்தான் நமது சகோதர நாடு என்று குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி போராட்டக்காரர்களுக்கு பதில் கொடுத் துள்ளார் ரம்யா. அதோடு, எனக்கு எதிராக போராடுபவர்கள், பாகிஸ்தான் நமது சகோதர நாடு என்று சொன்னவர்களுக்கு எதிராகவும் போராடுவார்களா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் ரம்யா. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியதற்காக குத்து ரம்யா மீது, பாரதிய ஜனதா மற்றும் விஷ்வஇந்து பரிஷத் உள்ளிட்ட சில அமைப்புகள் இணைந்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.