ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு இந்த விருதை பெறும் இரண்டாவது தமிழ் நடிகர் கமல் ஆவார். கமலுக்கு கிடைத்த கவுரவத்தையொட்டி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும், கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‛‛அவருக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய செவாலியே கிடைத்த தருணத்தில் அவர் ஆங்கிலத்தில் நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி செவாலியே வழங்கலாம். அவர் பேசும்போது, கே பாலசந்தர் அவர்கள், "அவன் எட்டாவது கூட முடிக்கல ஆனால் அவனுடைய ஆங்கிலத்தை புரிஞ்சுக்க எனக்கே டிக்ஸனரி தேவைபடுது" என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது. கலைக்காக உலகில் உள்ள அத்தனை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை கமல்ஹாசன் அவர்கள்! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுனர்வையும் கூட்டிக்கொடுக்கின்றன'' என்று பார்த்திபன் கூறியுள்ளார்.