ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாமி, சிங்கம், தாமிரபரணி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி. தற்போது இவர் சூர்யாவை கொண்டு சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‛எஸ்3'-யை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், கார்த்தி, கருப்பசாமி என்ற இருவர் ஹரிக்கு போன் செய்து, வீட்டில் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். முதலில் நள்ளிரவு 2.30 மணிக்கு பேசிய இந்த இருவர் தொடர்ந்து காலை 7 மணியளவிலும் போன் செய்து மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து ஹரி, அருகில் உள்ள விருகம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் ஹரியின் புகாரை ஏற்று விசாரித்து வருகின்றனர். கார்த்தி, கருப்பசாமி இருவரும் ஹரியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஹரி வீட்டிற்கு அருகிலேயே இருப்பதாகவும், இடப்பிரச்னை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அதன் வெளிப்பாடாக ஹரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.