புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சுந்தரபாண்டியன், தர்மதுரை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் செளந்தரராஜன். தற்போது சில படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர், தனது அம்மா, அண்ணன் மற்றும் உதவியாளருடன் திருச்செந்தூர் முருகனை வழிப்பட்டு, காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே கார் வந்து கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து காரில் இருந்த நால்வரும் உடனடியாக வெளியேறினர். இதனால் அதிர்ஷ்டவசமாக நால்வரும் உயிர் தப்பினர். ஆனால் காரும், காரில் இருந்த அவர்களது உடமைகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.