ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவின் மூத்த இயக்குனரான அடூர் கோபால கிருஷ்ணன் திரையுலகில் தனது 50வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறார்.. 75 வயதான இவர், இந்த வயதிலும் தன்னால் படம் இயக்கமுடியும் என்கிற நம்பிக்கையுடன் திலீப், காவ்யா மாதவனை வைத்து 'பின்னேயும்' என்கிற படத்தை இயக்கினார். ஆனால் கடந்த வாரம் வெளியான இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை என்பதே உண்மை. அதேசமயம் மோசமான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது இந்தப்படம்.. அடூர் கோபால கிருஷ்ணன் தங்களை ஏமாற்றிவிட்டதாக தேசிய விருது படங்களை இயக்கும் வித்தகரான டாக்டர் பைஜூ தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“இப்படி ஒரு படத்தை அடூர் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. சில அறிவு ஜீவிகள் இந்தப்படம் சூப்பர் என அடூர் கோபால கிருஷ்ணனை புகழ்ந்துகொண்டிருப்பதை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. இன்றைய சினிமாவுக்கு ஏற்றவாறு அவர் தன்னை அப்டேட் பண்ணிக்கொள்ளவே இல்லை. காலத்திற்கு ஒவ்வாத கதையும் வசனங்களும் காட்சிகளுமாக மலையாள சினிமாவை பின்னோக்கி இழுத்துச்செல்லும் முயற்சியைத்தான் அவர் செய்துள்ளார். வயது ஒரு பொருட்டே அல்ல.. சத்யஜித்ரே, அகிரா குரோசோவா போன்றவர்கள் தங்களது 70 வயதுகளில் அற்புதமான படங்களை தந்தை நாம் மறந்துவிடமுடியாது” என வழக்கம்போல தனது கருத்தை அதிரடியாக வெளிப்படுத்தியுள்ளார் டாக்டர் பைஜ