தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நான்கு கதைகள் கொண்ட படமாக சமீபத்தில் நமது என்ற படம் வெளிவந்தது. தற்போது நான்கு கதைகள் கொண்ட படமாக மாநகரம் தயாராகி வருகிறது. வழக்கு எண் ஸ்ரீ, யாருடா மகேஷ் சந்தீப் கிஷன், முண்டாசுபட்டி ராம்தாஸ், சார்லி ஆகிய நான்கு பேரும் வெவ்வேறு கிராமங்களிலிருந்த சென்னைக்கு வருகிறார்கள். நான்கு பேரும் சென்னை பற்றிய விதவிதமான கற்பனைகளுடன் வருகிறார்கள். நான்குபேரும் தனித்தனியாக வாழ்ந்தாலும் ஏதோ ஒரு வகையில் நான்கு பேரும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் மைய புள்ளியதாக ரெஜினா இருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியாகும் ஹைபர் லிங்க் பாணியிலான கதை.
லோகேஷ் கணகராஜ் இயக்குகிறார், செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜாவித் இசை அமைத்துள்ளார். மாயா படத்தை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. 70 சதவிகித படப்பிடிப்புகள் சென்னையின் தெருக்களில்தான் படமாக்கப்பட்டுள்ளது.