'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் அலி அபாஸ் ஜாபரும், சல்மான்கானும் மீண்டும் இணைய இருக்கிறார்கள் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அவர்கள் இணையும் படம் ‛ஏக்தா டைகர்' படத்தின் இரண்டாம் பாகம் என்றும், படத்திற்கு டைகர் ஜிந்த ஹே என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுப்பற்றி இயக்குநர் அலி அபாஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது... ‛‛இன்னும் உறுதியாகவில்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உறுதியானதும் அறிவிப்பு வெளியாகும். தற்போது நான், சுல்தான் படத்தின் கொண்டாட்டத்தை விடுமுறையாக கழித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.
‛ஏக்தா டைகர்' படம் 2012-ம் ஆண்டு சல்மான், கத்ரீனா நடிப்பில் கபீர்கான் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.