இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியத் திரையுலகத்தில் இதுவரை இப்படி ஒரு சம்பளத்தை யாருக்காவது கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். சிரஞ்சீவி நடித்து வரும் அவருடைய 150வது படமான 'கைதி எண் 150'வது படத்திற்காக பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். அந்தப் படத்தில் இடம் பெறும் பாடல்களில் 2 பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளாராம். சிரஞ்சீவியே விரும்பிக் கேட்டதால் நடனம் அமைத்துத் தர பிரபுதேவா சம்மதித்திருந்தார். தற்போது அந்த இரண்டு பாடல்களுக்கும் 'மாஸ்டர்' ஆக பணிபுரிவதற்கு பிரபுதேவாவிற்கு 1 கோடி சம்பளம் தர உள்ளார்கள் என டோலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன.
நடனம் அமைப்பதற்காக இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இவ்வளவு சம்பளத்தைத் தந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. படத்தில் இடம் பெறும் அந்த இரண்டு பாடல் காட்சிகளும் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட உள்ளதாம். படத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு 'காம்ப்ரமைஸ்' பண்ணாமல் மிகவும் 'ரிச்' ஆக எடுக்க வேண்டும் என்பது சிரஞ்சீவியின் கட்டளையாம். அதை அவருடைய மகனான ராம்சரண் நிறைவேற்றிக் கொடுக்கிறாராம். 'கைதி எண் 150' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நிறைவு பெறும் எனத் தெரிகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.