இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
செப்டம்பர் மாதம் 9ம் தேதி 'அச்சம் என்பது மடமையடா' படம் வெளியாகும் என இயக்குனர் கௌதம் மேனன் இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால், படத்திற்கான 20 சதவீத டப்பிங்கை சிம்பு இன்னமும் முடித்துக் கொடுக்காமலே இருக்கிறார் என்றும் ஒரு தகவல் உண்டு. தனக்குத் தர வேண்டிய சம்பள பாக்கியைத் தராமல் டப்பிங் பேச வரமாட்டேன் என்று சிம்பு சொல்லிவிட்டாராம். இதனிடையே, 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு ரீமேக்கை செப்டம்பர் 9ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த கௌதம் மேனன் தற்போது இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் தள்ளி வைத்துவிட்டாராம்.
செப்டம்பர் 9ம் தேதியன்று நாகசைதன்யா நடித்துள்ள 'பிரேமம்' படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினத்தில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'சாகசம் சுவாசகா சாகிப்போ' படம் வருவதை நாகசைதன்யா விரும்பவில்லையாம். 'பிரேமம்' வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாராம். அதன் பின் தயாரிப்பாளர்கள் கௌதம் மேனனிடம் பேசி அவருடைய படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள்.
இத்தனைக்கும் சிம்புவுக்கும், நாகசைதன்யாவுக்கும் 'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் மூலம் திருப்புமுனை கொடுத்ததே கௌதம்தான். தற்போது அந்த இருவருமே கௌதம் மேனன் பட வெளியீட்டு விவகாரத்தில் அவருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். 'ஹிட்' கொடுத்தவருக்கே 'இம்சை' கொடுப்பதில் இருவரும் கில்லாடிகள் போலிருக்கிறது.