பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த ராதா, அதன்பிறகு சர்ச்சையின் நாயகி ஆகிவிட்டார். பைசூல் என்ற தொழில் அதிபர் தன்னை ஏமாற்றி 20 லட்சம் மோசடி செய்து விட்டதாக குற்றம்சாட்டி புகார் அளித்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ராதா தான் என்னை ஏமாற்றினார் என்று பைசூல் புகார் கூறினார்.
சமீபத்தில் உமாதேவி என்ற பெண் "என் கணவரை ராதா அபகரித்துக் கொண்டார்" என்று புகார் அளித்தார். இந்த நிலையில் ராதா, புழல் சிறையில் இருக்கும் வைரம் என்ற ரவுடி தன்னை கொலை செய்து விடுவதாக போனில் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவர் வெளியிட்ட வாட்ஸ் அப் ஆடியோவில்... "என் பெயர் வைரம். நான் கந்துவட்டி தொழில் செய்கிறேன். தற்போது புழல் சிறையில் இருக்கிறேன். முனிவேலுடன் உனக்கு இருக்கும் தொடர்பை விட்டுவிட வேண்டும். என் பெயரை முனிவேலிடம் சொன்னாலே, உன் பின்னால் வரமாட்டார். ஓடி போய்விடுவார். நான் ரவுடியாக இருந்தாலும், நேர்மையாக நடப்பவன். பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். பிரச்சினையை பெரிதாக்க நினைத்தால் நீ இருக்க மாட்டாய். இப்படி நான் மிரட்டுவதை போலீசில் சொன்னாலும், கவலை இல்லை. உன்னை கொலை செய்கிற அளவுக்கு, நீ பெரிய ஆள் இல்லை. ஒரு சாதாரண நடிகை. என் மீது 16 வழக்குகள் உள்ளன. முனிவேலை நீ கல்யாணம் பண்ணிப்பார். நீ இருக்க மாட்டாய். முனிவேலும் இருக்க மாட்டார். என்று ஒருவர் மிரட்டுகிறார். நடிகை ராதாவும் "நீ சொல்ற இடத்தக்கு நான் வர்றேன். முடிந்தால் என்னை கொலை செய் பார்ப்போம்" என்று பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தனது வக்கிலுடன் சென்று நேரில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதா... ‛புழல் சிறையில் இருக்கும் ரவுடி வைரம், தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இந்த பிரச்னையின் பின்னணியில் முழுக்க முழுக்க உமாதேவி தான் உள்ளார், அவருக்கு பைசூலும் உதவுகிறார். முனிவேல், தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறார். அடுத்தவரின் பெண்ணை அபகரிக்கும் அளவுக்கு நான் மோசமானவள் அல்ல. மேலும் முனிவேலும் சின்ன குழந்தை கிடையாது. உமாதேவியும், அமைதியான பெண் கிடையாது. கந்துவட்டி கொடுக்கும் ஒரு அடாவடி பெண். இப்பிரச்னை தொடர்பாக விரைவில் முதல்வரின் தனிப்பிரிவிற்கும் புகார் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு ராதா கூறினார்.