டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றென்றும் தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் என கொண்டாடப்படும் சிரஞ்சீவி இன்று தனது 61வது பிறந்தநாளை தொட்டுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப்பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக தெலுங்கு சினிமாவில் வலம்வந்தவர்.
தமிழில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய 47 நாட்கள் படத்தில் அறிமுகமான சிரஞ்சீவி, மேலும் ரஜினியுடன் ராணுவ வீரன், மாப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இறங்கியதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதோடு, தனது மகன் ராம்சரனை முன்னணி ஹீரோவாக்கும் வேலைகளில் ஈடுபட்டார் சிரஞ்சீவி. இப்போது சில வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் சினிமாவில் நுழையும் விதமாக தற்போது தனது 150வது படத்தில் நடிக்கும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்.
அந்தவகையில் அவர் நடிக்கும் 150வது படத்திற்கு 'கைதி நம்பர் 150' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக்காக வி.வி.விநாயக் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்தின் டெக்னீசியன்கள் விபரங்கள் அடங்கிய டீசர் ஒன்று சிரஞ்சீவியின் பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது. இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.