ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை நேரில் சென்று பிரபு, சிவக்குமார், சூர்யா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வாழ்த்தினர்.
தமிழ்த் திரையுலகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு செவாலியே விருது பெறப் போகும் நடிகர் கமல்ஹாசனுக்கு திரையுலகத்தினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சமூகவலைதளங்களில் பலர் வாழ்த்து சொல்லிய நிலையில் தற்போது கமலை நேரில் சென்று வாழ்த்த தொடங்கினர்.
கமல், தன் வீட்டு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் கடந்த ஒருமாத காலமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது தனது இல்லத்தில் ஓய்வில் இருக்கும் கமலை திரையுலகினர் பலரும் நேரில் வாழ்த்த தொடங்கியுள்ளனர்.
நடிகர் சங்கம் சார்பில் விஷால், கார்த்தி, ஸ்ரீமன், நந்தா, சதீஷ், உதயா உள்ளிட்டவர்கள் நேரில் சென்று வாழ்த்தினர். இதேப்போன்று சிவக்குமார், சூர்யா, கார்த்தி, காளிதாஸ் ஜெயராம், ராம்குமார், துஸ்யந்த், பிரபு, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கமலுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.