தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சசிகுமார் மதுரை பகுதி கதையில் தொடர்ந்து நடிக்கிறார். அதுவும் ஒரு குறிப்பட்ட சாதியை உயர்த்திப் பிடிக்கும் படங்களில் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை சசிகுமார் மறுத்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள கிடாரி படம் விரைவில் வெளிவர உள்ளது. இது தொடர்பாக பேட்டி அளித்த சசிகுமார் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறியதாவது:
சாதி மோதல் படங்களில் நான் நடித்ததில்லை. இனிமேலும் நடிக்க மாட்டேன். எனது படங்கள் ஒரே சாதிக்குள் நடக்கும் பிரச்சினைகள் பற்றித்தான் பேசியிருக்கிறது. தயவு செய்து எனக்கு சாதி முத்திரை குத்தாதீர்கள்.
கிடாரி நான் தயாரிக்கும் 8வது படம். பாலுமகேந்திராவின் தலைமுறைகள் படத்தை தயாரித்ததை பெருமையாக நினைக்கிறேன். அடுத்தும் குழந்தைகள் பற்றிய ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறேன். கிடாரி படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தால் நானே தயாரிக்கிறேன். இன்னும் சில படங்களில் நடித்து விட்டு பிறகு நான் படம் இயக்குவேன். நடிகனாக, இயக்குனராக, தயாரிப்பாளராக ஏதோ ஒரு வகையில் சினிமாவில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பேன். என்கிறார் சசிகுமார்.