டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும பொருட்டு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதையடுத்து, ஒரு மல்டி ஹீரோ கதையை தேர்ந்தெடுத்து அந்த படம் மூலம் கிடைக்கும் வசூலையும் கட்டிடம் கட்ட நிதியாக எடுத்துக்கொள் ளப்போவதாக நடிகர் சங்க செயலாளர் விஷால் கூறி வருகிறார். இந்த நிலையில், அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் நாடகத்தை நடத்தி அதன்மூலமும் நிதி திரட்டப்போவதாக அடுத்தக்கட்ட முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்.
ஆனால், பொன்னியின் செல்வன் அனைவரையுமே கவர்ந்த நாடகம் என்பதால் இதில் தற்போதைய திரையுலகின் முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா? என்று விஷாலை நோக்கி கேள்விகள் எழுந்துள்ளன. அந்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், பொன்னியின் செல்வன் நாடகத்தில் கமல் சார் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. மற்றபடி, ரஜினி சார் நடிப்பது பற்றி தெரியவில்லை. அதோடு, நட்சத் திர கிரிக்கெட் போட்டியின்போது விஜய், அஜீத் இருவருமே ஆர்வம் காட்டவில்லை. அதனால் ஆர்வத்துடன் கலந்து யார் யார் கலந்து கொள்கிறார்களோ அவர்கள் மட்டுமே இந்த பொன்னியின் செல்வன் நாடகத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்..