வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நடிகை இலியானா, படத்தின் தயாரிப்பாளர் தனது பெயரை பயன்படுத்தி படத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக தயாரிப்பாளர் கவுரங் தோஷி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறி இருந்தார். தற்போது இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து, நிலைமையை மோசமாக்கி உள்ளது. இந்த விவகாரம் பற்றி தயாரிப்பாளர் கவுரங் தோஷி கூறுகையில், ஆன்கின் 2 படத்திற்கு இலியானா தேவையில்லை. ஏற்கனவே அமிதாப் பச்சன், அர்ஜூன் ராம்பால், அர்ஹத் வர்ஷி, அனில் கபூர் ஆகிய 4 பேர் இருக்கிறார்கள். இந்த படத்தை புரோமோட் செய்வதற்கு நடிகர்களின் பெயர்களை பயன்படுத்த வேண்டும் என்றால், ஆன்கின் 2 பட நடிகைகளான தீபிகா படுகோனே அல்லது கத்ரினா கைப் இடம் கேட்டிருப்போம். இலியானா ஒன்றும் பெரிய நடிகை இல்லை. இலியானாவுக்கு இந்த படம் பிடித்துப் போய், இப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தார். அதே சமயம், தனது ஏஜன்சி சில களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதால் ஒரு வாரம் காத்திருக்கும்படியும் கூறினார். ஆனால் தற்போது அவர் இப்படி குற்றம்சாட்ட என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை என்றார்.