பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி படம் வருகிறதென்றால் அதனை அவரது ரசிகர்கள் தீபாவளியாக கொண்டாடுவார்கள். படம் எப்படி இருந்தாலும் விசிலடித்து கைதட்டி வரவேற்பார்கள். ஆனால் அவர்களே ரஜினி நடித்த ஒரு படத்தை திரையிட வேண்டாம் என்று முற்றுகை போராட்டம் நடத்திய படம் ஒன்று உண்டு. அதுவும் மகேந்திரன் இயக்கிய படமான கை கொடுக்கும் கை.
ரஜினி தனது ஆரம்ப கட்டத்தில் சில கன்னட படங்களில் நடித்தார். அதில ஒன்று கதா சங்கமம். மூன்று கதைகள் கொண்ட இந்தப் படத்தில் ரஜினி முனித்தாய் என்ற கதையில் நடித்தார். அதில் ஒரு பார்வையற்ற பெண்ணை பலாத்காரம் செய்து கெடுத்துவிடும் பண்ணையாராக நடித்தார். இந்தப் படத்தை தமிழல் கொண்டு வர விரும்பிய ரஜினி, அந்த பொறுப்பை மகேந்திரனிடம் கொடுத்தார். படத்தை பார்த்த மகேந்திரன் அதில் நடித்ததுபோல் இதிலும் வில்லனாக ரஜினி நடித்தால் சரியாக இருக்காது என்று கருதி. ஜமீன்தாரால் கெடுக்கப்படும் பார்வையற்ற பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கும் இளைஞனாக ரஜினி கேரக்டரை மாற்றி நடிக்க வைத்தார்.
பார்வையற்ற பெண்ணாக ரேவதி நடித்தார். படம் வெளிவந்ததும் ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி. ஒரு பெண்ணை கெடுத்தவனை ரஜினி மன்னித்து அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதா என்று கொதித்தார்கள். இயக்குனர் மகேந்திரன் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். மதுரை அலங்கார் தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற மகேந்திரனை முற்றுகையிட்டார்கள். அப்போது அவர்களிடையே பேசிய மகேந்திரன் "இதை ரஜினி படமாக பார்க்காதீர்கள். என்னுடைய படமாக பாருங்கள். பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பார்வையற்ற பெண்ணுக்கு வாழ்க்கை தருவதான் ஆகச் சிறந்த தியாகம். பலாத்காரம் செய்தவனை கொல்வதன் மூலம் இழப்புகள் திரும்பு வந்து விடுமா. கற்பு என்பது பெண்ணின் உடம்பில் இல்லை. மனதில் இருக்கிறது" என்று விளக்கி கூறிவிட்டு வந்தார். ஆனாலும் ரஜினி ரசிகர்கள் சமாதானம் அடையவே இல்லை. படமும் வெற்றி பெறவில்லை.