ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை அஸ்வினி. மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். பிரேமா பல்லகி என்ற படத்தில் அறிமுகமாகி கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மெர்லின் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தை இயக்கிய கீரா இயக்கும் இந்தப் படத்தில் விஷ்னுப்ரியன் ஜோடியாக நடிக்கிறார். இது மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை. முதல் காலகட்டத்தில் 80களில் வாழ்ந்த பெண்ணாகவும், அடுத்த இரு காலகட்டத்தில் பேயாகவும் நடிக்கிறார்.
ஒரு உதவி இயக்குனர் தன் நண்பர்களுக்கு ஒரு பேய் கதை சொல்கிறார். ஒரு கட்டத்தில் அவர் சொன்ன கதை அப்படியே நடக்க ஆரம்பிக்கிறது. ஒரு மனிதனுக்கு தேவையானவை சரியான வயதில் கிடைக்க வேண்டும். அதுமாதிரி தாம்பத்திய உறவும் அமைய வேண்டும். அப்படி அமையாவிட்டால் மனநலம் பாதிக்கப்பட்டு விபரீத எண்ணங்கள் உருவாகும் என்பதை சொல்லும் படம். மெர்லின் மூலம் தமிழில் தொடர்ந்து நடிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அஸ்வினி