இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் சினிமா வாழ்க்கையை த்ரிஷ்யத்துக்கு முன், த்ரிஷ்யத்துக்கு பின் என இரண்டு விதமாக பிரிக்கலாம். த்ரிஷயத்துக்கு முன் அவர் இயக்கிய படங்கள் டீசன்டான வெற்றிதான் என்றாலும், த்ரிஷயம் அவரை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்தது.. அதன் விளைவுதான் தமிழுக்கு வந்து கமலை வைத்து 'பாபநாசம்' இயக்கியது... இப்போது முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் மோஸ்ட் வாண்டேட் நபராக மாறியுள்ள ஜீத்து ஜோசப் பிருத்விராஜை வைத்து 'ஊழம்' என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டு இதோ செப்டம்பரில் ரிலீஸ் பண்ண காத்திருக்கிறார்.
அடுத்ததாக மம்முட்டியை வைத்து இயக்கவுள்ளார் என சொல்லப்பட்டு வந்தது.. அதை ஆரம்பத்தில் மென்மையாக மறுத்து ஜீத்து ஜோசப், மம்முட்டிக்கு இன்னும் கதை தயாராகவில்லை என்றும், ஆனால் மம்முட்டி படத்தை இயக்கப்போவதாக ஏற்கனவே தானும் அவரும் ஒப்பந்தம் பண்ணிக்கொண்டதாகவும் கூறியவர் இப்போது மம்முட்டிக்கு தோதான கதையை தயார்செய்து விட்டதாக கூறுகிறார்.. இதனிடையே த்ரிஷ்யம் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலுடன் ஏன் சேரவில்லை என அவரது ரசிகர்கள் அன்புத்தொல்லை பண்ணி வருகிறார்கள்.. மோகன்லாலுமே ஜீத்துவின் டைரக்சனில் மீண்டும் நடிக்க விரும்புகிறார். இதை தொடர்ந்து திலீப்-காவ்யா மாதவன் மற்றும் மீண்டும் பிருத்விராஜ் என கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு ஜீத்து ஜோசப் பிஸி தான்.