தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாகா படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடிப்பில் வீர சிவாஜி, முடிசூடா மன்னன் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த படங்களைத் தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் நெருப்புடா என்ற படத்தை தயாரித்து நடித்த வருகிறார் விக்ரம் பிரபு. கபாலியில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்கில் இந்த படத்திற்கு டைட்டீல் வைக்கப்பட்டிருப்பதால் நெருப்புடா படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி நிற்கிறது. இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும் உருவெடுக்கிறார் விக்ரம் பிரபு.
மேலும், கும்கியில் யானைப்பாகனாக நடிக்கத் தொடங்கி வாகா படத்தில் ராணுவ வீரர் என பலதரப்பட்ட கதைகளில் நடித்து விட்ட விக்ரம் பிரபு, இந்த நெருப்புடா படத்தில் சென்னை பையனாக நடிக்கிறார். சென்னையில் உள்ள ஒரு இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்த படமாம். அதனால் சென்னை தமிழ் பேசி நடித்து வருகிறார். அதோடு, சென்னை சம்பந்தப்பட்ட இந்த கதையை முழுக்க முழுக்க சென்னையில்தான் படமாக்குகிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பை ஏற்கனவே சென்னையில் படமாக்கியவர்கள், இன்னும் சில தினங்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்குகிறார்களாம்.