சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கம்பெனி புரொடக்சன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரித்து நடித்துள்ள படம் கிடாரி. பிரசாந்த் முருகேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமாருடன் நிகிலா, நெப்போலியன், சுஜா உள்பட பலர் நடித்துள்ளனர். தர்புக சிவா இசையமைத்துள்ள இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது சசிகுமார் பேசும்போது,
கிடாரி கதையை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. பெரும்பாலும் ஹீரோவை சுற்றித்தான் கதைகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் பல கேரக்டர் களை சுற்றி கதை இருக்கும். சில படங்களின் கதையை கேட்டதுமே நடிக்க வேண்டும் போலிருக்கும். ஆனால் இந்த கிடாரி படத்தின் கதையை கேட்ட துமே அதை இயக்க வேண்டும் என்கிற ஆசையும் எனக்கு ஏற்பட்டது. நான் நடித்த படங்களில் குறைந்த நாட்களில் அதாவது 64 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்து விட்டார் டைரக்டர் பிரசாந்த் முருகேசன். அதற்கு காரணம் டைரக்டர் மற்றும் கேமராமேன் கதிரின் திறமைதான். மேலும், சில காட்சிகளை டைரக்டர் வேகமாக முடிக்க வேண்டும் என்று சொல்வார். ஆனால் நான் ஒன்னும் அவசரமில்லை. ரெண்டு நாட்களில்தான் இந்த சீனை எடுத்து முடிக்க முடியும். அதனால் அவசரப்படாமல் படத்தை எடுங்கள் என்று சொன்னேன்.
சுஜாவை இதற்கு முன்பு கிளாமராகத்தான் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக அற்புதமாக நடித்துள்ளார். அடுத்து, நிகிலா வெற்றிவேலுக்குப்பிறகு என்னுடன் நடித்துள்ளார். என்னுடன் நடித்த லட்சுமிமேனன், ஸ்வாதி, அனன்யா எல்லோருமே இரண்டு படங்களில் நடித்து விட்ட னர். அந்த வரிசையில், வெற்றிவேலில் நடித்த நிகிலா இந்த கிடாரியிலும் என்னுடன் நடித்துள்ளார். வரலட்சுமி உள்பட சிலர்தான் ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளனர். விரைவில் அவர்களும் என்னுடன் இரண்டாவது படத்தில் நடிப் பார்கள். இந்த படத்தில் செம்பா என்ற கேரக்டரில் துறுதுறுவென்று நடித்துள்ளார் நிகிலா. வெற்றிவேலில் அமைதியாக நடித்த அவர் அதற்கு நேர்மாறாக இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த வேடத்தில் நடிக்க புதுமுக நடிகைதான் தேடி வந்தோம். ஆனால் எதிர்பார்த்தபடி கிடைக்கவில்லை. அதன்பிறகுதான் நிகிலாவை நடிக்க வைக்க முடிவு செய்தோம்.
இந்த படம் எனது எட்டாவது தயாரிப்பு. அதில் பாலுமகேந்திரா அய்யா இயக்கிய தலைமுறைகள், பாலா இயக்கிய தாரைத்தப்பட்டை குறிப்பிடத்தக்கவை. தலைமுறைகள் படத்தை இயக்க முடிவானபோது பாலுமகேந்திரா சாரை நானே போய் பார்க்க இருந்தேன். ஆனால் அவரோ, ஏன் உன் ஆபீஸ்க்கு வந்து நான் ஒரு காபி சாப்பிடக்கூடாதா? என்று சொல்லிக்கொண்டு அவரே நேரில் வந்தார். தலைமுறைகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படம் எனது தயாரிப்பில் இயக்கயிருந்தார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை சென்றவர் திரும்ப வில்லை. நான் நேசித்த, ரசித்த ஒரு இயக்குனர் என் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியதை பெருமையாக கருதுகிறேன். எனது வாழ்க்கையில் தலைமுறைகள் மறக்க முடியாத முக்கியமான படம்.
இவ்வாறு சசிகுமார் பேசினார்.