தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எழுத்தாளர் ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் கடந்த வாரம் வெளிவந்தது. மீடியாக்களின் பாராட்டுதல்களோடு பெரும் வரவேற்பை பெற்றள்ள இந்தப் படத்தின் திருட்டு விசிடிக்கள் ரிலீசான மறுநாளே விற்பனைக்கு வந்துவிட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியர் புரொடக்ஷன் பிரபு, பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் கொடுத்தார். "திருட்டு விசிடியில் பார்க்கும் ரசிகர்கள் படம் பிடித்திருந்தால் அதற்கான கட்டணத்தை எங்கள் வங்கி கணக்கில் செலுத்துங்கள். அந்தப் பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு கழிப்பிடம் கட்டித்தருவோம்" என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை ஜோக்கரின் வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினி "ஜோக்கர் படம் பார்த்தேன். மிகவும் பிடித்திருந்தது, நல்ல படம் எடுத்திருக்கிறீர்கள், ரொம்ப சந்தோஷம் இந்த மாதிரியான கதை அம்சம் கொண்ட படத்தை தயாரிக்க துணிச்சல் வேண்டும். உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்" என்று தயாரிப்பாளர் பிரபுவிடம் தெரிவித்திருக்கிறார். அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஜோக்கருக்கு பாரட்டுகள் தெரிவித்திருப்பதால் ஆரம்பத்தில் டல் அடித்த ஜோக்கரின் வசூல் இப்போது ஏறுமுகத்தில் இருக்கிறது.