'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அதிர்வலைகளை ஏற்படுத்திய பச்சை என்கிற காத்து படத்தை இயக்கிய கீரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் மெர்லின். இதில் விஷ்ணுப்ரியன் ஹீரோ, கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகை அஸ்வினி நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஆடுகளம் முருகதாஸ், லொள்ளுசபா ஜீவா, சிங்கம்புலி நடித்துள்ளனர். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், முத்துக்குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது 3 காலட்டங்களில் நடக்கும் கதை என்கிறார் கீரா.
அவர் மேலும் கூறியதாவது: 1965, 2004, 2016 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை. இந்த மூன்று காலகட்டங்களிலும் ஹீரோவும், ஹீரோயினும் டிராவல் ஆகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தாம்பத்திய உறவு அந்தந்த வயதில் நடந்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதுவே மனரீதியான பிரச்சினையை உண்டு பண்ணிவிடும் என்பதுதான் படம் சொல்ல வருகிற சேதி.
35 வயதை தாண்டியும் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ஹீரோவுக்கு ஒரு பெரிய ஹீரோ திடீர் வாய்ப்பு தருகிறார். 15 நாட்களுக்குள் கதை வேண்டும் என்கிறார் இதனால் தான் தங்கியிருக்கும் வீட்டை பூட்டிக்கொண்டு கதை எழுதுகிறார். நண்பர்கள் டார்ச்சர் செய்வார்கள் என்பதால் அந்த வீட்டிற்குள் பேய் இருப்பதாக பொய் கதைகள் சொல்லுவார். ஒரு கட்டத்தில் அவர் சொன்னா பேய் கதை உண்மையாக மாறும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இதில் அட்டகத்தி தினேஷ் நட்புக்காக அந்த நடிகராகவே நடித்துள்ளார். இது பேய் படம் அல்ல. சைக்கலாஜிக்கல் திரில்லர் படம். பேய் இருக்கிறது என்ற முடிவையும், இல்லை என்ற முடிவையும் கிளைமாக்சில் வைத்துள்ளேன். இருக்கா இல்லையா என்பதை பார்வையாளர்கள் தீர்வுக்கே விட்டுவிடுகிறேன். என்கிறார் கீரா.