மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமாவில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுப்பது ஏன்? என்ற கேள்விக்கு பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் பதில் அளித்துள்ளார். இனிமையான குரலுக்கு சொந்தமான பாடகி ஸ்ரேயா கோஷல், பொலிவான முகத்துக்கும், அழகான தேகத்துக்கும் சொந்தக்காரர். ஆளையே அசரடிக்கும் ஸ்ரேயாவின் அழகில் மயங்கிய சிலபல இயக்குனர்கள் தங்கள் படத்தில் நடிக்கும்படி அவ்வப்போது கோரிக்கை வைப்பதும், அவற்றை ஸ்ரேயா மறுப்பதும் தொடர் கதையாகி விட்டது. பாடகி ஸ்ரேயாவுக்கு நடிப்பில் துளியளவும் ஆர்வம் இல்லை என்பதால், நான் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இப்படி அடம்பிடிப்பது ஏன்? என்று அவரிடம் கேட்டால், நான் ஒரு பாடகி. நடிக்க வந்தால் பாட்டில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும். அதனால் நடிக்க மாட்டேன், என்று தெளிவாக கூறுகிறார்.