'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வாரம் ஜெயசூர்யா நடித்த பிரேதம் மற்றும் இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம் என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. ஆனால் படம் ரிலீசாவதற்கு முன்னாள் மலையாள நடிகர் ஜெயசூர்யாவிடம் பலரும் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யவேண்டாம் என படித்து படித்து சொன்னார்கள்.. ஏன், ஜெயசூர்யாவே தனது இரண்டு பட தயாரிப்பாளர்களிடமும் இதை வேண்டுகோளாகவே வைத்தார். சொன்னது போலவே தான் இப்போது நடக்கிறது..
ஆம்.. பிரேதம் படம் நல்ல வரவேற்பு, விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு படமான இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம் படம் வசூலில் பின்தங்கியே இருக்கிறது. அதேசமயம் பிரேதம் படத்தை பாராட்டியும் தாவூத் இப்ராஹிம் படத்தை விமர்சித்தும் சோஷியல் மீடியாவில் செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரேதம் படம் எப்படியும் ஓடிவிடும் என ஜெயசூர்யாவுக்கு தெரியும்.. ஆனால் அவர் முதன்முதலில் அதிரடி போலீஸ் நாயகனாக நடித்து வெளியான இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம் படத்தைதான் ரொம்பவும் எதிர்பார்த்தார். இப்போது பிரேதம் ஹிட்டானதால் சந்தோஷப்படுவதா இல்லை, இன்னொரு பட சுனங்குவதை கண்டு வருத்தப்படுவதா என திரிசங்கு நிலையல் தத்தளிக்கிறாராம் ஜெயசூர்யா.