ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் களமிறங்கிய தனது ஆண் வாரிசுகளில் மூத்த மகன் டைரக்சன், நடிப்பு என பெரும் புகழும் அடைந்துகொண்டு இருப்பதை பார்த்து சந்தோஷப்படுவதா அல்லது, நடிக்கப்போகிறேன் என கிளம்பிய இளைய மகன், நடிகையின் பின்னால் சுற்றுகிறானே என நினைத்து வேதனைப்படுவதா என புரியாமல் தவித்து வருகிறார் மலையாள சினிமாவின் மிக முக்கிய நடிகர், கதாசிரியான சீனிவாசன்.
ஆம்.. இவரது மூத்த மகன் வினீத் சீனிவாசன் திருமணமானவர்.. நல்ல, நேர்த்தியான படங்களை இயக்குவதுடன், நடிப்பிலும் வெற்றிகரமாக சாதித்து வருகிறார்.. இவரது தம்பியான தயன் சீனிவாசனை இவர்தான் தான் இயக்கிய 'திரா' படத்தின் மூலம் நடிகனாகவும் ஆக்கினார். ஆனால் அதன்பின் கடந்த மாதம் வெளியான 'அடி கப்பியாரே கூட்டமணி' என்கிற படத்தில் இவரும் நடிகை நமீதா பிரமோத்தும் இணைந்து நடித்திருந்தனர்.. அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதை தொடர்ந்து நமீதா பிரமோத் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, தயனுடன் ஜோடியாக சுற்றி வருகிறாராம். இதனால் தயன் தற்போது நடித்துவரும் 'ஒரேமுகம்' படத்தின் படப்பிடிப்புக்கும் அடிக்கடி மட்டம் போட ஆரம்பித்தாராம். படத்தின் இயக்குனரும் தயாரிப்பளாரும் ஒருவழியாக தயனின் அண்ணன் வினீத் சீனிவாசன் மூலமாக நிலைமையை எடுத்துச்சொல்லி தயனை படப்பிடிப்பிற்கு வரவழைத்து படத்தை முடித்தார்களாம்.
தயனை வைத்து இன்னொரு படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்த தயாரிப்பாளர் ஒருவரும் இதனால் படத்தை ட்ராப் பண்ணிவிட்டாராம். இது இப்படி இருக்க, நமீதாவின் அப்பா நேரடியாக தயனின் தந்தை சீனிவாசனை சந்தித்து அவரது பையனை கண்டித்து வைக்க சொல்லிவிட்டு போனாராம். தான் இத்தனை வருடங்களாக சம்பாதித்து சேர்த்த நற்பெயரை மகன் குட்டிச்சுவராக்குவது கண்டு வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகர் சீனிவாசன்.