கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா என வரிசையாக இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்தார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவற்றை அடுத்து வெளியான பென்சில், எனக்கு இன்னொருபேர் இருக்கு ஆகிய இரண்டு படங்களும் கமர்ஷியலாக வெற்றியடையவில்லை.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வருகிறது - 'புரூஸ்லீ'. கீர்த்தி கர்பண்டா, ஆனந்த் ராஜ், பாலசரவணன் முதலானோர் நடிக்கும் படம் இது. இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்தை 'கெனன்யா ஃபிலிம்ஸ்' தயாரித்து வருகிறது.
ஆக்ஷன், காமெடி படமாக உருவாகியுள்ள 'புரூஸ்லீ' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். 'புரூஸ்லீ' படத்தை அடுத்த மாதம், அதாவது செப்டம்பர் மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் நடித்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து ப்ளாப் ஆனதால் 'புரூஸ்லீ' படத்தின் தயாரிப்பாளர் சற்றே கலக்கத்தில் உள்ளார்.