பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடிக்கவில்லை, ஹன்சிகா, சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோரும் நடிக்கவில்லை, எந்த ஒரு கானா பாட்டும் இல்லை, அரைகுறை ஆடை தெரியும் குத்துப்பாட்டும் இல்லை, ஆனாலும் படம் 50வது நாளைத் தொட்டிருக்கிறது. இப்படி ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 'அப்பா' படம். ஒரு படத்திற்கு நட்சத்திரங்கள் முக்கியமல்ல படத்தின் கதைதான் முக்கியம் என்பதை 'அப்பா' படம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கைவிட மாட்டார்கள் என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்.
சமுத்திரக்கனி இயக்கம், நடிப்பில் அவருடன் சில சிறுவர் சிறுமியர்களை மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து குறைந்த செலவில் ஒரு நிறைவான படத்தை எடுத்துக் காட்டி இந்த சாதனையை செய்திருக்கிறார். நான்கு தெரு, நான்கு வீடுகள் இதுதான் படத்தின் கதைக் களம், ஒரு சில காட்சிகளில் மட்டும் ஒரு 100 பேர், அவ்வளவுதான். வேறு எந்த பிரம்மாண்டமும் இல்லை, கதையையும், கதாபாத்திரங்களையும் பிரம்மாண்டமாக்கி இப்படிப்பட்ட ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
இளையராஜாவின் இசையும், ஒரு இயல்பான வாழ்க்கையை நம் கண்முன் காட்டிய தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்கள்தான் தமிழ் சினிமாவின் பெருமையை இந்த உலகிற்கே உணர்த்தும். நல்ல படங்களை கொடுப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும் நல்ல படங்களையும் வரவேற்று ரசிக்கும் ரசிகர்களுக்குத்தான் அந்தப் பாராட்டுக்களைக் கொடுக்க வேண்டும்.