மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு போட்டியாக நடித்து நடிகையர் திலகம் என்று பெயர் எடுத்தவர் சாவித்ரி. 20 ஆண்டுகள் சினிமாவில் தனிப்பெரும் சக்தியாக கோலோச்சியவர். இந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டத்தட்ட நடித்துவிட்டார். சினிமாவில் ராணியாக இருந்த சாவித்ரியின் சொந்த வாழ்க்கை சோகமானது. நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்ட சாவித்ரி, அதில் கருத்து வேறுபாடு, சொந்த படம் எடுத்து பொருளாதார இழப்பு என்று அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்து, தன் கடைசி காலத்தில் வறுமையில் சிக்கி இறந்தார்.
இந்நிலையில், சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் வேளையில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையும் சினிமாவாக உருவாக உள்ளது. சாவித்ரி சினிமாவில் ராணியாக இருந்த காலம் தொட்டு கடைசியில் வறுமையில் சிக்கி இறந்தது வரை அவருடைய வாழ்க்கையை படமாக உருவாக்க உள்ளார்கள். அஸ்வின் என்பவர், தமிழ், தெலுங்கு மொழியில் இப்படத்தை இயக்க உள்ளார்.
இதனிடையே சாவித்ரியாக நடிக்க நடிகை தேர்வு நடந்து வந்தது. அனுஷ்கா, காஜல், வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக, தற்போது நடிகை நித்யா மேனன், அந்த ரோலுக்கு தேர்வாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாவித்ரியின் உயரம், தோற்றத்திற்கு ஏற்ற நடிகையாக நித்யா மேனன் இருப்பதால் அவரையே நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர். நித்யா மேனனும் சாவித்ரி வேடத்தில் நடிக்க மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.