பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கிச்சா சுதீப், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், நாசர், சதீஷ் நடித்துள்ள முடிஞ்ச இவன புடி கடந்த வாரம் வெளிவந்தது. கன்னடம், மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியானது. தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் வெளியான இந்தப் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு தந்திருப்பதாகவும் இதனால் கூடுதலாக 120 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் ஈ சுதீப் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “முடிஞ்சா இவன புடி” படத்திற்கு மக்களிடம் தற்போது மேலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வரும் வெள்ளி கிழமையிலிருந்து ( நாளை) தமிழகத்தில் கூடுதலாக 120 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. கன்னடத்தில் இப்படம் நான்கு நாட்களில் 18 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . முடிஞ்சா இவன புடி கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.