மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
முன்னாள் நடிகையும் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் கொஞ்சம் கண்டிப்புக்கு பெயர் போனவர். பலமுறை அதை போது வெளியில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்.. இந்தமுறை கல்லூரி மாணவர்கள் அவரது கோபத்திற்கு ஆளாகி அவரிடம் வாங்கி கட்டிக்கொண்டுள்ளார்கள்.. நேற்றைய தினம் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேச சென்ற ஜெயா பச்சன், நிகழ்ச்சிக்கு முன்பாக கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஆவலுடன் அவரை தங்களது செல்போன் கேமராக்களால் புகைப்படம் எடுத்தனர் மாணவர்கள். ஆனால் அதற்கு உடனேயே தனது எதிர்ப்பை தெரிவித்த ஜெயா பச்சன் “போட்டோ எடுக்காதீர்கள்” என மாணவர்களை கடிந்துகொண்டாராம்.
“ஒரு செல்போனும் அதில் கேமராவும் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்து விடுவீர்களா..? இங்கே நான் முக்கியமாக பேசிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் அடிக்கும் ப்ளாஷ் வெளிச்சம் என்னை எரிச்சலடைய வைக்கிறது என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்” என கொந்தளிக்க மாணவர்கள் மிரண்டுபோய், அப்பால் விலகினார்கள்.. அதுமட்டுமல்ல, ஜெயா பச்சன் மேடையில் பேசும்போதும் இதை சுட்டிக்காட்டி, “இன்றைய பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் முதலில் இதுபோன்ற விஷயங்களில் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்” என மீண்டும் மாணவர்களின் செயலுக்கு மறைமுக கண்டனத்தை வெளிப்படுத்தினார்..
பின் குறிப்பு : ஜெயா பச்சன் ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும் கூட நேரம் தவறாமையை ரொம்பவும் கண்டிப்புடன் பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.