ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளிலும் வெளியாகி வரும் திரைப் படங்களுக்கு யு, யுஏ, ஏ ஆகிய சான்றிதழ்கள்தான் இப்போதுவரை வழங்கப் பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் இந்த சான்றிதழ்கள் தவிர, யு12+, யு 15+, ஏ+ ஆகிய பிரிவுகளிலும் படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாம். இந்த புதிய சான்றிதழ் பிரிவுகள் காரணமாக வன்முறை, செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை இனிமேல் கத்தரிக்க மாட்டார்களாம். அதற்கு தகுதியான சான்றிதழ்களை கொடுத்து விடுவார்களாம்.
இது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு அவசரகதியில் அதாவது ரயில் டிக்கெட் தட்கலில் எடுப்பது போன்று உடனடியாக சான்றிதழ் பெறவேண்டும் என்றால் கூடுதல் தொகை கொடுத்து சென்சார் செய்து கொள்ளும் முடியும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாம். திரையுலகினரில் நீண்டகால கோரிக்கை காரண மாக இந்த புதிய சான்றிதழ் பிரிவுகளை இந்திய தணிக்கைக்குழு நடை முறைக்குகொண்டு வருகிறதாம்.