பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளிலும் வெளியாகி வரும் திரைப் படங்களுக்கு யு, யுஏ, ஏ ஆகிய சான்றிதழ்கள்தான் இப்போதுவரை வழங்கப் பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் இந்த சான்றிதழ்கள் தவிர, யு12+, யு 15+, ஏ+ ஆகிய பிரிவுகளிலும் படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாம். இந்த புதிய சான்றிதழ் பிரிவுகள் காரணமாக வன்முறை, செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை இனிமேல் கத்தரிக்க மாட்டார்களாம். அதற்கு தகுதியான சான்றிதழ்களை கொடுத்து விடுவார்களாம்.
இது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு அவசரகதியில் அதாவது ரயில் டிக்கெட் தட்கலில் எடுப்பது போன்று உடனடியாக சான்றிதழ் பெறவேண்டும் என்றால் கூடுதல் தொகை கொடுத்து சென்சார் செய்து கொள்ளும் முடியும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாம். திரையுலகினரில் நீண்டகால கோரிக்கை காரண மாக இந்த புதிய சான்றிதழ் பிரிவுகளை இந்திய தணிக்கைக்குழு நடை முறைக்குகொண்டு வருகிறதாம்.