அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல சினிமா நடிகையான குஷ்பு, கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பின்னர், ஜாக்பாட், பூவா தலையா, சிம்ப்ளி குஷ்பூ, நினைத்தாலே இனிக்கும் போன்ற நிகழ்ச்சிகளில் சில சேனல்களுக்காக தொகுத்து வழங்கினார். அதோடு, மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி உள்பட பல தொடர்களிலும் நடித்தார்.
இந்நிலையில், அடுத்தபடியாக அவர் ஒரு சரித்திர தொடரை முன்னணி சேனல் ஒன்றுக்காக தயாரிக்கப்போகிறாராம். இந்த சேனலில் நீண்டகாலமாக முக்கிய அங்கம் வகித்து வருபவரான ராதிகா நடிப்பில் தற்போது வாணி ராணி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், அடுத்தபடியாக ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த நேரத்தில், குஷ்புவின் தொடரை ஒளிபரப்பு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படி தான் நடிக்கும் தொடரில் குஷ்பு, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளராக மட்டும் செயல்படப்போகிறாராம்.