'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
வெற்றி, தோல்வியை மாறி மாறி சந்தித்து வரும் ஸ்ரீகாந்த், சில ஆண்டுகளுக்கு முன், கோலிவுட்டின் ரோமியோவாக திகழ்ந்தவர். தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடிப்பதற்காக, தன் அடுத்தடுத்த அடிகளை கவனமாக எடுத்து வைக்கிறார். இப்போது, நம்பியார் என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, ஹீரோவாகவும் நடித்துள்ளார். இனி ஸ்ரீகாந்துடன் பேசுவோம்...
நம்பியார் படம் பற்றி சொல்லுங்க?
இந்த படத்தில், என் கேரக்டர் பேர் ராமச்சந்திரன். என்னுடன் நடித்துள்ள சந்தானம் பேர் நம்பியார். நல்லதுக்கான உதாரணம் என் கதாபாத்திரம்; கெட்டதுக்கான உதாரணம் சந்தனாம். கெட்டதை அடக்குவதும், அதை வெல்வதும் தான் கதை; இதை ஜாலியாக, பொழுதுபோக்காக சொல்லப் போகிறோம்; இது, ஒரு அழகான காதல் கதை கூட. சுனைனா, இதில் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பல காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதிதாக இருக்கும்.
இந்த படம் தாமதமாக வெளிவர காரணம்?
தற்போதைய சூழ்நிலையில், பெரிய ஹீரோவாக இருந்தாலும், சின்ன ஹீரோவாக இருந்தாலும், குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட முடிவது இல்லை; அதற்கான காரணம் நிறைய இருக்கு. வாரத்துக்கு, ஐந்து படம், ரிலீஸ் ஆகிறது; தியேட்டர் கிடைப்பதில்லை. படம் தயாரிப்பது சுலபம்; அதை ெளியிடுவது தான் ரொம்ப கஷ்டம்.
சந்தானத்தை படத்தில் பாட வச்சிருக்கீங்க போல?
ஆமாம்; முதல் முறையாக, அவர் இந்த படத்தில் சொந்த குரலில் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, சூட்டிங் பார்க்க வந்தார். அவரையும், அந்த பாட்டில் இழுத்து போட்டு, ஆட வச்சிருக்கோம். பாட்டை கேட்டால் பலருக்கும் ஆட்டம் வரும்.
முன்பெல்லாம் உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம்; இப்போது எப்படி?
இன்று வரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்பதே, ரசிகர்கள் எனக்கு கொடுத்த ஆதரவால் தான். சில நேரங்களில் தவறான படத்தில் நடித்து விட்டதாக ரசிகர்கள் வருத்தப்பட்டு இருக்காங்க; இனிமேல் படங்களை தேர்வு செய்வதில் ரொம்ப கவனமாக இருப்பேன்.
கடுமையாக போராடியும், நிலையான ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உண்டா?
அனைத்து நடிகர்களுக்குமே ஏற்றம், இறக்கம் வரும். எனக்கும் பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க வேண்டும்; நல்ல கதை அமைய வேண்டும்; வெற்றிப் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. வாழ்க்கையில் எல்லாமே ஒரு வகை போராட்டம் தான்; போராட்டம் இல்லை என்றால், வாழ்க்கை வெறுமை ஆகும். என் ஆசை, கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேறும். என்னால் சினிமாவை விடமுடியாது. சினிமாவும் என்னை விடாது.
உங்க வெற்றிக்கு உறுதுணையா இருந்த ஹீரோயின்கள் பற்றி...?
நல்ல பாடல், நல்ல கதை, நல்ல வசனம், இவை எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே, ஹீரோயின் கெமிஸ்ட்ரி பேசப்படும்; இல்லை என்றால், எவ்வளவு சிரமப்பட்டு நடித்தாலும் பயன் இல்லை.ரோஜாக்கூட்டம் படத்தில் பூமிகாவுடன் நடித்தபோது, அண்ணன், தங்கச்சியா என, சிலர் கேட்டனர். நானும், சினேகாவும் மூன்று படங்கள் சேர்ந்து நடித்தோம். மூன்று படங்களுமே நன்றாக ஓடின. மெர்குரிப்பூக்கள் படத்தின் போது, எனக்கும், மீரா ஜாஸ்மீனுக்கும் நிறைய சண்டைகள் வந்தன. அந்த சண்டை வெளியில் யாருக்குமே தெரியாது. பகிரங்கமாக சொல்கிறேன்; தற்போதைய சினிமாவில் காதலுக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது. படங்கள், வேறு தளத்துக்கு போய் விட்டன.
உங்க குடும்பம்?
என் மனைவி வந்தனா, என் வாழ்க்கையில் வந்தபின், நிறைய மாறியிருக்கேன்; கோபத்தை குறைத்திருக்கிறேன். என் தயாரிப்பு வேலைகளை அவர் பார்த்துக் கொள்கிறார். குழந்தைகள் பள்ளிக்கு போறாங்க; என் பாட்டிக்கு, 93 வயது. இன்றும் என் சினிமாவை நேசிக்கிறார். அம்மாவும், அப்பாவும், எனக்கு முழு ஆதரவு தருகின்றனர்.